எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய அத்தாட்சி மின்னஞ்சல் முகவரி: aththatchi@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
Admin-message
Published On: Monday, February 29, 2016

வலுவான அணியுடனான போட்டியில் தவறுகளை அனுமதிக்க முடியாது: அப்ரிடி

Print Friendly and PDF


வலுவான அணிக்கு எதிரான போட்டியில் தவறுகள் அனுமதிக்கப்பட முடியாது என பாகிஸ்தான் அணித்தலைவர் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் 130 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை கடந்து 7 விக்கெட்களால் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

இப்போட்டியின் பின்னரான செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அப்ரிடி, ‘ இவ்வாறான போட்டிகளின் போது சிறிது நேரமும் ஓய்வெடுக்க முடியாது என்பதை இன்றைய போட்டி உணர்த்தியுள்ளது. வீரர்கள் அறையில் ஓய்வு எடுக்க முடியாது. இன்றைய போட்டியின் போதும் நாம் சிறிய தவறுகளை செய்துள்ளோம். ஆனால் இவ்வாறான தவறுகள் வலுவான அணி ஒன்றுடனான போட்டியில் அனுமதிக்கப்பட முடியாது’ என தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷில் நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் தனது முதலாவது போட்டியில் இந்தியாவை எதிர்கொண்ட பாகிஸ்தான் 5 விக்கெட்களால் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :


Related News
முக்கிய குறிப்பு: அத்தாட்சி இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு அத்தாட்சி மீடியா நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு அத்தாட்சியுடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -

0 comments:

இந்த செய்தி தொடர்பான கருத்துக்களை இடவும்

 

Sign Up to Aththatchi Newsletter

© 2016 ATHTHATCHI NEWS All Rights Reserved
|
Call us on (+94) 728 855 738