எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய அத்தாட்சி மின்னஞ்சல் முகவரி: aththatchi@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
Admin-message
Published On: Monday, February 29, 2016

பாடசாலைக்கு முன்னால் பஸ்ஸூக்கும் லொறிக்கும் இடையே நசுங்குண்ட ஆசிரியை

Print Friendly and PDF

பண்டாரவளை-பதுளை பிரதான வீதியின் 7ஆவது மையில் கல், பதுளை உடுவரை தமிழ் வித்தியாலயத்துக்கு முன்னால் இன்று (29) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், டபிள்யூ.எம்.பிரியலதா (47) என்ற ஆசிரியை ஸ்தலத்திலே பலியாகியுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை, உடுவரை தமிழ் வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த ஆசிரியையே இவ்விபத்தில் பலியாகியுள்ளார்.

விபத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதாகவும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை முடிவடைந்து வீடு செல்வதற்காக பிரதான வீதியில் காத்திருந்த போது, அவ்விடத்துக்கு வந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸில் ஏற முற்பட்டுள்ளார். இதன்போது பஸ்ஸூக்கு பின்னால் வந்த லொறி ஒன்று பஸ்ஸூடன் மோதியதையடுத்து ஆசிரியை தவறி கீழே விழுந்து பஸ்ஸூக்கும் லொறிக்கும் இடையே நசுங்குண்டு ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.

மேலும், அவருடன் இருந்த இரு ஆசிரியைகளும் படுகாயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பில் பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் பஸ் மற்றும் லொறியின் சாரதிகளை கைதுசெய்துள்ளனர்.
Share this article :


Related News
முக்கிய குறிப்பு: அத்தாட்சி இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு அத்தாட்சி மீடியா நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு அத்தாட்சியுடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -

0 comments:

இந்த செய்தி தொடர்பான கருத்துக்களை இடவும்

 

Sign Up to Aththatchi Newsletter

© 2016 ATHTHATCHI NEWS All Rights Reserved
|
Call us on (+94) 728 855 738